நயன்தாராவை ஒதுக்கி வரும் வாரிசு நடிகர்.. அவமானப்படுத்தியது தான் காரணமா
நயன்தாரா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால், ஒரே ஒரு முன்னணி நடிகர் மட்டும் இவரை ஒதுக்கி வருவதாக திரை வட்டாரத்தில் பேச்சு உண்டு. அவர் வேறு யாருமில்லை, தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுன் தான்.

நயன்தாராவா வேண்டவே வேண்டாம்
வாரிசு நடிகரான இவர், நடிகை நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்றால் மட்டுமே இவர் இப்படி கூறி வருவதாக பேசப்படுகிறது.

இதற்கு காரணமும் நயன்தாரா தானாம். ஒரு முறையில் விருது விழா ஒன்றில் நடிகை நயன்தாராவிற்கு அல்லு அர்ஜுன் கையால் விருது வழங்கப்பட இருந்தது. மேடை ஏறி வந்த நயன்தாரா, அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ஸ்ரீ பிரியாவிடம் இருந்து விருதை பெற்றுகொண்டார்.

அதன்பின் விக்னேஷ் சிவன் தான் இந்த விருதை தனக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி, விக்னேஷ் சிவன் மேடைக்கு வர, உடனடியாக தனது கையில் இருந்த விருதை விக்னேஷ் சிவனிடம் ஒப்படைத்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

மேடையில் நயன்தாரா இப்படி நடந்துகொண்டதால் தான் இதுவரை நயன்தாராவின் படங்களில் நடிக்கவே மாட்டேன் என அல்லு அர்ஜுன் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான ஒன்று என தெரியவில்லை.

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri