நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- என்னென்ன தெரியுமா?
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார். பெயருக்கு ஏற்றார் போல முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார்.
அவரது நடிப்பில் என்ன படங்கள் நடித்தாலும் அது சூப்பர் டூப்பர் ஹிட் தான், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் நல்ல ஹிட்டடித்துள்ளது.
கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தில் நடிகை நயன்தாரா சிவப்பு நிற உடையில் இருக்கிறார்.

நயன்தாரா புடவையின் சீக்ரெட்
வெர்மில்லியன் ரெட் நிறத்தில் லெஹங்கா போன்ற வடிவமைப்பில் நயன்தாராவின் திருமண புடவையை வடிவமைத்தவர் மோனிகா ஷா.
அவர் புடவை பற்றி கூறுகையில், கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஹோய்சல என்ற 11 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் வடிவத்தை பூத்தையல் போட்டு சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
மேலும் வாழ்க்கையில் லட்சுமி கடாக்ஷம் உண்டாக வேண்டும் என்பதற்காக நயன்தாராவின் முழுக் கை வைத்த பிளவுஸில், கடவுள் லக்ஷ்மியின் உருவமும் பல்வேறு மணிகளும் பொறிக்கப்பட்டுள்ளது நயன்தாராவின் புடவையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த புடவைக்கு ஏற்றார்போல மரகதம் பொருந்திய வைர நகைகளை நயன்தாரா அணிந்திருப்பார். கழுத்தில் ஜாம்பியன் மரகதம் நெக்லஸ்,போல்கி செயின், சாட்லடா எனப்படும் 5 அடுக்கு வைர ஹாரம் உள்ளிட்டவாற்றை அணிந்திருக்கிறார் என்றார்.
திருப்பதியில் காலணி அணிந்து வந்த விவகாரம்- விக்னேஷ் சிவன், நயன்தாரா செய்த வேலை
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri