11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை நஸ்ரியா
நஸ்ரியா
மலையாள சினிமாவில் முதலில் தனது நடிப்பை பயணத்தை தொடங்கி பின் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் தான் நஸ்ரியா.
அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் பிரபலமானவர் அடுத்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மலையாளம், தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். நஸ்ரியா நடிப்பில் கடைசியாக தெலுங்கில் நானிக்கு ஜோடியாக நடித்த அண்டே சுந்தரனிகி என்ற படம் வெளியானது.
தமிழ் படம்
இந்த நிலையில் 11 வருட இடைவேளைக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் தமிழ் பக்கம் வருவதாக தகவல் வந்துள்ளது.
தமிழில் அவர் ஒரு வெப் தொடர் நடித்து வருவதாகவும் பின்பு சமீபத்தில் சூர்யாவுடன் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.