நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார்
நடிகை நஸ்ரியா
நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதிலும், இன்று வரை நஸ்ரியா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.

ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ட்ரான்ஸ் எனும் திரைப்படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.

மீண்டும் நடிக்க வந்தது ஏன்?
இது குறித்து அவர் கூறுகையில், '' நானி உடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஆதரவு அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ". என கூறியுள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri