ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான்
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையை கொடுத்துள்ளது.
நெல்சன் புதிய படம்
இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் புதிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால், இயக்குனராக அல்ல, தயாரிப்பாளராக.
ஆம், முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார் நெல்சன் திலீப்குமார். இப்படத்தை அவருடைய துணை இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்கவுள்ளாராம்.
நெல்சன் எப்படி தன்னுடைய படங்களுக்கு அனிருத்தை இசையமைக்க வைக்கிறாரோ. அதே போல் நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.
ஹீரோ, ஹீரோயின்
இந்நிலையில், இப்படத்தின் ஹீரோவாக கவின் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்கள். முதல் முறையாக இந்த ஜோடி வெள்ளித்திரையில் இணைந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.