பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா?
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் வாரம் நடக்கப்போவது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தங்கமயில் - சரவணன் விவாகரத்து வழக்குதான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குடும்பத்தை ஏமாற்றி, அனைவரையும் சிறைக்கு அனுப்பிய காரணத்தினால் இனி தங்கமயிலுக்கு இந்த குடும்பத்தில் இடமில்லை என முடிவு செய்துவிட்டனர்.

இதனால் தங்கமயிலிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார் சரவணன். ஆனால், தனக்கு விவாகரத்து வேண்டாம், சரவணன் மாமாவுடன் இணைந்து வாழ விருப்பம் என தங்கமயில் கூறுகிறார்.
விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
நடிகை ஷாதிகா
விவாகரத்து வழக்கு ஒருபக்கம் செல்ல, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புதிய வரவாக பிரபல நடிகை ஷாதிகா என்ட்ரி கொடுத்துள்ளார்.

அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை ஷாதிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் வந்துள்ளார். இவரின் வருகையால் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.