விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம்
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் படிப்பின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் அமைந்துள்ள சீரியல் தான் சின்ன மருமகள்.
தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் வாழ்க்கையில் எதிர்ப்பாராத விதமாக திருமணம் நடக்க அதனால் அவர் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றிய கதையாக இப்போது உள்ளது.

கடைசியாக ஒளிபரப்பான எபிசோடில், தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு செல்லும் வகையில் விபத்து ஏற்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் அவர் வலியால் துடிக்க அந்த நேரம் அங்கு கார் ஓட்டி வந்த சேது அவரை பார்த்து பதறி மருத்துவமனை அழைத்து செல்கிறார்.

அடுத்து என்ன
இப்படி கதைக்களம் பரபரப்பாக செல்ல தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.
அதாவது இத்தனை நாள் கர்ப்பமாக இருந்த தமிழ்ச்செல்விக்கு குழந்தை பிறந்துவிட்டது. கர்ப்பமாக இருப்பது போல் நடிக்க நாட்களில் தான் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக படப்பிடிப்பு தள போட்டோக்களுடன் நடிகை ஸ்வேதா பதிவு போட்டுள்ளார்.