அன்பு -ஆனந்திக்கு நிச்சயதார்த்தம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியவந்துவிட்டதால் அன்புவின் அம்மா தற்போது துளசியை தனது மருமகள் ஆக்க முயற்சித்து வருகிறார்.
அன்பு அதற்க்கு மறுப்பு தெரிவித்தாலும் எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்து ஒப்புக்கொள்ள வைக்கிறார். துளசியை திருமணம் செய்வதாக அன்பு தற்போது அம்மாவுக்கு சத்தியமும் செய்து கொடுத்துவிட்டார்.
மகேஷ் கொடுத்த ட்விஸ்ட்
இந்நிலையில் கம்பெனியின் விழாவில் மகேஷ் எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் செய்கிறார். அன்பு - ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் என அறிவிக்க போகிறாராம்.
மேலும் கம்பெனியை சேர்ந்த எல்லோரும் தீம் பார்க்கிற்கு செல்கின்றனர். அப்போது கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி வாந்தி எடுக்கிறார். இப்போதாவது மகேஷுக்கு உண்மை தெரியவருமா.
அடுத்த வார ப்ரோமோவில் பாருங்க.