3 நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
கடந்த வாரம் தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் திரைக்கு வந்தது.
இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் பவிஷ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர்.

பா. பாண்டி மற்றும் ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கிய மூன்றாவதுதிரைப்படம் இது. காதல் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan