நான்கு நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தற்போது பிஸியாக இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கிய ராயன் படம் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
ரத்தம் தெறிக்க தெறிக்க இப்படத்தை எடுத்திருந்தார் தனுஷ். இதை தொடர்ந்து தனுஷ் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.

இப்படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan