கையில் இத்தனை படங்கள் இருந்தும் விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு நிலைமையா
பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜய் ஆண்டனி, 2012 -ம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினர். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்றும் நிரூபித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை மூலமாக தற்போது குணமாகி வருகிறார்.

சிக்கலில் படங்கள்
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மூன்று படங்களை satellite rights எந்த நிறுவனமும் வாங்க முன்வரவில்லையாம்.
மேலும் ரத்தம் படத்தின் இயக்குனர் சி.எஸ் அமுதன் நேரடியாக உதயநிதியை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். ஆனால் உதயநிதியும் எந்த உதவியும் செய்யவில்லையாம்.

தேவயானியை மோசமாக நடத்திய பிரபல இயக்குனர்.. உண்மையை உடைத்த சக நடிகை