லிங்கா பட நடிகைக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Sonakshi Sinha
By Parthiban.A Mar 06, 2022 08:00 AM GMT
Report

ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அந்த படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. மோசடி வழக்கில் தான் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

டெல்லியில் ஒரு eventல் கலந்துகொள்வதற்காக சோனாக்ஷி 37 லட்சம் ருபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் விழாவில் அவர் பங்கேற்காமல் இருந்திருக்கிறார். அதனால் அந்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டிருக்கின்றனர், ஆனால் சோனாக்ஷியின் மேனேஜர் அதை தரமுடியாது என மறுத்திருக்கிறார்.

அதனால் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக சோனாக்ஷி ஒருமுறை வந்து தனது ஸ்டேட்மென்ட்டை பதிவு செய்து இருக்கிறார். ஆனால் அடுத்தடுத்து அவர் ஆஜராக தவறியதால் தற்போது நீதிபதிகள் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருக்கின்றனர்.

இதனால் சோனாக்ஷி விரைவில் கைதாவரா என கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கு எப்படி நகரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US