நான் சினிமாவுக்கு வரலனா இந்த வேலை தான் செய்திருப்பேன்: ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு ட்ராக்கிலும் தற்போது கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். அவர் தற்போது பல முன்னணி இயக்குனர்கள் படத்திற்காக இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்று இருக்கிறார். அப்போது அவர் நடிப்பில் அடுத்து வரும் படங்களின் ட்ரைலர்கள் திரையிடப்பட்டு இருக்கிறது. அதன் பின் மாணவர்கள் முன்னிலையில் ஜிவி பேசி இருக்கிறார்.
அப்போது மாணவர்கள் கேள்விகள் சிலவற்றிர்க்கும் பதில் கூறினார். சினிமாவுக்கு வரவில்லை என்றால் என்னவாக ஆகி இருப்பேன் என கூறிய அவர் தனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் எனவும் சினிமாவுக்கு வரவில்லை என்றால் கிரிக்கெட்டர் ஆக முயற்சி செய்திருப்பேன் என கூறி உள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.
