பொன்னி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் முடிவுக்கு மற்றொரு சீரியல்... ரசிகர்கள் வருத்தம்
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக இருந்து வந்த விஜய் டிவி இப்போது சீரியல்கள் மூலமாகவும் முன்னேறி வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள், ஆஹா கல்யாணம் போன்ற தொடர்கள் பெரியவர்களை தாண்டி இளைஞர்களையும் கவர்ந்து வருகிறது.
முடியும் தொடர்
சமீபத்தில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது. அந்த தொடருக்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த புதிய தொடரின் புரொமோவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது பொன்னி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரப்போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது மதியம் ஒளிபரப்பாகி வந்த தங்கமகள் சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.
ஆனால் எப்போது என்ற விவரம் வெளியாகவில்லை, இந்த செய்தி கேட்ட தங்கமகள் சீரியல் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri
