தமிழ் சினிமா 1000 கோடி படம் கொடுக்க முடியாதது ஏன்.. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன காரணம்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இடைவெளிக்கு பிறகு தமிழில் மதராஸி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் அந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக முருகதாஸ் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
தமிழ் இயக்குனர்கள் educate செய்கிறார்கள்
ஒருவர் ரோட்டில் வேகமாக போகிறார் என்றால் அது ஏற்கனவே போட்டு வைக்கப்பட்ட பாதை. ஆனால் ஒருவர் தனி பாதை போட்டு செல்ல வேண்டும் என்றால்.. தமிழ் சினிமாவில் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள் தனியாக பாதை போடும்போது அதில் குழி பள்ளம் எல்லாம் தான் வரும்.
மற்ற மொழி படங்கள் 1000 கோடி வருகிறது என பேசுகிறார்கள். மற்ற இயக்குனர்கள் entertainment மட்டுமே செய்கிறார்கள், தமிழ் இயக்குனர்கள் தான் educate செய்கிறார்கள். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என தமிழ் இயக்குனர்கள் educate செய்கிறார்கள். அதனால் மற்ற சினிமா துறைகளுக்கும் தமிழ் சினிமாவுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது.
இவ்வாறு முருகதாஸ் கூறி இருக்கிறார்.