அஞ்சலியுடன் சரவணன் இருப்பதை பார்த்த பாண்டியன், அடுத்து நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக இருந்தவர்கள் இப்போது சீரியல்களிலும் மாஸ் காட்டி வருகிறார்கள்.
காதல், குடும்பம் என விதமான எமோஷன்களையும் காட்டும் வண்ணம் நிறைய சீரியல்கள் உள்ளது. அப்படி குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் சரவணன்-மயில் பிரச்சனை தான் பெரியதாக செல்கிறது.

புரொமோ
இன்றைய எபிசோடில், மயிலின் அம்மா-அப்பா, பாண்டியன் வீட்டிற்கு வந்து தனது மகளுக்காக நியாயம் கேட்கிறார்கள். ஆனால் அங்கு பிரச்சனை அதிகமாகி அடிதடி நடக்கிறது.
அந்த நேரத்தில் மயில் பாண்டியன் வீட்டிற்கு சென்ற தனது அம்மா-அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். அவர்களிடம் இனி சரவணன பற்றி பேச வேண்டாம், அவர்களிடம் பிரச்சனைக்கு செல்ல வேண்டாம் என கெஞ்சுகிறார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கோவிலில் சரவணன்-அஞ்சலி பேசிக்கொண்டிருப்பதை பாண்டியன் பார்த்து ஷாக் ஆகிறார்.
பின் தனது மகனை தனியாக அழைத்து வந்த பாண்டியன் அஞ்சலி குறித்த ஓபனாக சரவணனிடம் கேட்கிறார், அவர் என்ன சொல்லுவார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri