Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஒன்று போனால் இன்னொன்று வந்துகொண்டே இருக்கிறது என மக்கள் புலம்புவது வழக்கம்.
அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது. கடைசி எபிசோடில் முத்துவேல்-கதிர் ஒன்றாக பேசிக்கொண்டிருந்த போது அதைப்பார்த்த குமார் அவர்களிடம் சண்டை போட்டார்.

சண்டை போடும் போது குமரவேல் எதிர்ப்பாரா விதமாக முத்துவேலை தள்ளிவிட அவர் சுயநினைவு இழந்து கீழே விழுந்துவிடுகிறார். பின் அவரை கதிர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் குமரவேல் எங்கு நாம் மாட்டிக்கொள்வோம் என்று பழியை கதிர் மேல் போட பெரிய பிரச்சனை வெடித்தது. ஆனால் முத்துவேல் உண்மையை கூறியதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

புரொமோ
இந்த வார எபிசோட் புரொமோவில், மயில் CheckUpக்காக மருத்துவமனை செல்கிறார், அந்த விஷயத்தையும் மீனாவிடம் கூறுகிறார்.
அப்போது அதைக்கேட்ட கோமதி நான் செல்கிறேன் என்கிறார். மருத்துவமனையில் பரிசோதனையின் போது யாரும் வரவில்லையா என கேட்க அப்போது கோமதி நான் வந்துள்ளேன் என மயிலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.
கோமதியை மருத்துவமனையில் கண்டதும் அவர் எமோஷ்னல் ஆகிறார். புரொமோ இதோ,
விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu