இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பொய் சொல்லி ஏமாற்றியதற்காக வீட்டை விட்டு அனுப்பப்பட்டார் மயில். அதன் பின் பல சம்பவங்கள் நடந்துவிட்டது.
தற்போது மயில் தான் கர்ப்பம் என சரவணனிடம் சென்று கூறினால் அவரோ, 'அது யாருடைய குழந்தை.. எனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என கூறிவிடுகிறார். அதனால் அடுத்து கதை எந்த திசையில் போக போகிறது என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இது மட்டும் நடந்தால்
மயில் அப்பா ரோலில் நடித்து வரும் சைவம் ரவி போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
"இவ கொஞ்சம் அடங்குனா எல்லாம் சரியாயிடும்" என மயில் அம்மாவை தாக்கி பதிவிட்டுள்ளார் அவர். "யார் அடக்குறது" என கேள்வியையும் அவர் கேட்டுள்ளார்.