Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்த கதைக்களம் என்னவென்றால் காந்திமதியின் பிறந்தநாள் தான்.
அவரது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட அவரது மகன்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் காந்திமதி எனக்கு எனது மொத்த குடும்பத்துடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும், எனது கணவருடன் இருப்பது போல் புகைப்படம் வேண்டும் என தனது 2 ஆசைகளை கூறியுள்ளார்.
இதற்கு அவரது மகன்கள் மறுப்பு தெரிவிக்க அப்படி என்றால் எனக்கு எந்த ஒரு நிகழ்வும் வேண்டாம் என்கிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில் காந்திமதி பிறந்தநாள் பேச்சு வார்த்தை நடக்கிறது.
பின் செந்தில்-மீனா வீட்டில் அடுத்த காட்சிகள் இடம்பெறுகின்றன. அதாவது காலையில் எழுந்த செந்தில் Furniture வருவதாக மீனாவிடம் கூறுகிறார், வீட்டிற்கு வந்த பொருள்களை கண்ட மீனா எவ்வளவு இது என கேட்கிறார்.
இந்த Dining Table ரூ. 42 ஆயிரம் என்கிறார், இதைக்கேட்ட மீனா செம ஷாக் ஆகிறார். அதன்பின் அவர் அந்த பணம் எங்கிருந்து வந்தது என கூறுகிறார், அதாவது அவர் தனது அப்பா கொடுத்த ரூ. 10 லட்சத்தில் இருந்து தான் இந்த பொருளை முழு பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறுகிறார்.
செந்தில் கூறியதை கேட்டு கஷ்டப்பட்ட மீனா வீட்டை பூட்டிவிட்டு மிதியடி கீழே சாவியை வைத்துவிட்டு பாண்டியன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு போனதுமே அவரை கண்டு அனைவரும் சந்தோஷப்பட அவர் அங்கேயே சாப்பிடுகிறார்.