மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்
குடும்பமாக உட்கார்ந்து சீரியல் பார்க்க வேண்டுமா அப்போது எங்களது தொலைக்காட்சியை இரவு 8 மணிக்கு பாருங்கள் என விஜய் டிவி ஒளிபரப்பும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கடந்த சில வாரங்களாக கோமதி-பாண்டியன் சண்டை தான் ஓடிக் கொண்டிருந்தது, பின் எப்படியோ அது முடிவுக்கும் வந்தது.
இப்போது மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ள எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

எபிசோட்
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடில், Intestineல் கட்டி இருப்பதாக மருத்துவர் கூறியதால் அடுத்தடுத்த சிகிச்சைக்காக கதிருடன் திருச்சி செல்கிறார்கள்.
அங்கு மருத்துவரை சந்திக்க அவர் சர்ஜரி செய்தே ஆக வேண்டும் என்கிறார், அவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என பேசிக் கொள்கிறார்கள்.

பின் கடைக்கு வந்த சரவணன், மயில் சொன்னதை நான் நம்பவில்லை, அவள் பொய் கூறுகிறாள் என்ற கோபத்தில் தான் அப்படி பேசிவிட்டேன் என செந்திலிடம் கூறி புலம்புகிறார்.
குழந்தை எனக்கு வேண்டும் ஆனால் மயில் எனக்கு வேண்டாம் என்கிறார்.
வீட்டில் மீனா, பாண்டியன் கோமதியிடம் மயில் தற்கொலை செய்துகொள்ள சென்ற விஷயத்தை கூறி அதனால் தான் அவருக்கு உதவி செய்தேன் என்கிறார்.

பாண்டியன், கோமதியை மயிலை சென்று பார்க்க கூறுகிறார், சும்மா ஆறுதலாக மட்டும் பேசிவிட்டு வரச் சொல்கிறார், மற்றபடி எதுவும் உறுதியளிக்க வேண்டாம் என கூறுகிறார்.
கடைசியாக, முத்துவேல்-கதிர் இருவரும் காரில் ஒன்றாக இறங்குவதை பார்த்த சக்திவேல் செம கோபப்படுகிறார், அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.