வீட்டிற்கு வந்த கோமதியை மீண்டும் வம்பிற்கு இழுந்த மயில் அம்மா, வெடித்த பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கலாம் என்ற ஒரு பழமொழியை வைத்து பொய் மேல் பொய் கூறி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் திருமணம் நடந்தது.
மயில் படிக்கவில்லை, வயது அதிகம், கவரிங் நகை என பல விஷயங்களில் பொய் கூறி திருமணம் செய்து வைத்தனர். இப்போது அந்த பொய்யால் மயில் தனது வாழ்க்கையை இழந்து இப்போது தனது அம்மா வீட்டில் இருக்கிறார்.

அடுத்தடுத்து நடந்த பிரச்சனையில் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பெரியதாக வெடித்தது. ஒருகட்டத்தில் மீனா எல்லா உண்மையையும் வீட்டில் கூற இப்போது கோமதி மயிலை காண அவரது வீட்டிற்கு வருகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், கோமதி மயிலை காண அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு வந்த கோமதியை வாங்க என்று எதுவும் கூறாமல் சண்டை போடும் முடிவிலேயே பாக்கியம் உள்ளார்.

வாரிசு என்று யாரும் வந்துவிடாதீர்கள், யாருக்கும் குழந்தையை நான் காட்ட மாட்டேன், முக்கியமாக இவள் புருஷனிடம் குழந்தையை காட்டவே மாட்டேன். குழந்தையை உங்களிடம் கொடுத்துவிட்டால் என் மகள் நிலைமை என்ன ஆவது.
அங்கு உங்களது மகன் எவளோடோ ஊர் சுற்றிக் கொண்டிருப்பார், அதையெல்லாம் கேட்க மாட்டீர்கள் என கோபமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பாக்கியம் பேச பொறுமையாக இருந்த கோமதி ஒருகட்டத்தில் கோபப்பட்டு அவரும் பதிலுக்கு பேச தொடங்கிவிட்டார்.

பின் மயில் கோமதியை தனியாக தனது அறைக்கு அழைத்து செல்கிறார், பரபரப்பான சண்டையும் இன்றைய எபிசோட் முடிவுக்கும் வருகிறது.