குடும்பத்தினர் முன் திடீரென சரவணன் செய்த காரியம், கடும் ஷாக்கில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் பூதாகரமாக வெடித்துள்ளது சரவணன்-மயில் பிரச்சனை. தனது மனைவி பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் கூறினால் அவர்களும் கஷ்டப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சரவணன் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.
ஆனால் மயிலோ அவரது பொறுமையை சோதிக்கும் வகையில் அவரையே கோமதி-பாண்டியன் திட்டும் அளவிற்கு பொய் கூறி திட்டுவாங்க வைத்து வருகிறார்.

எபிசோட்
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடில், கோமதி-பாண்டியன் இருவரும் மாறி மாறி சரவணனிடம் என்ன தான் பிரச்சனை என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

எவ்வளவோ சமாளித்தும் முடியாததால் சரவணன் தன்னால் முடியாமல் பாண்டியனை கட்டியணைத்து கதறி கதறி அழுகிறார். அவர் இப்படி அழுவதை கண்டு பாண்டியன்-கோமதி ஷாக் ஆகி அவர்களும் அழுகிறார்கள்.
ஆனால் இன்றைய எபிசோடில் சரவணன் இன்னும் உண்மையை சொல்லவில்லை.

ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri