கேவலமாக பேசிய அம்மா, மயில் செய்த வேலை, சரவணனுக்கு வந்த மெசேஜ்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவி ரசிகர்கள் பல வருடங்களாக பார்த்து பெரிய ஆதரவு தரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் முடிவை தொடர்ந்து அதே வேகத்தில் 2வது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் 4 ஜோடிகளின் காட்சிகள் தான் காட்டப்பட்டு வருகிறது. முதலில் மயில் மறைத்த உண்மைகளின் பிரச்சனை தொடங்கியது, அதில் இருந்து சீரியலின் கதைக்களம் பரபரப்பாகவே ஒளிபரப்பாகிறது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், கோச்சிங் கிளாஸிற்காக ராஜியை சென்னைக்கு அழைத்து சென்றிருந்த கதிர் இப்போது வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வர உள்ளனர். இதனால் கடைக்கு சென்று இருவரும் டிரஸ் எடுத்துக்கொண்டு செல்லமாக பேசிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

அடுத்து கடையில் இருக்கும் சரவணனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது, அதாவது அவருடைய முன்னாள் காதலி அஞ்சலி மெசேஜ் அனுப்ப இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
வீட்டில், பாண்டியனை சமாதானப்படுத்த கோமதி முயற்சிக்க கடைசியில் ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. கடைசியாக மயில் வீட்டில் அனைவரும் சாப்பிட உட்காருகிறார்கள்.

அப்போது மயில் சாப்பிடும் போது அவரது அம்மா, இங்க சாப்பிடுறதுக்கே வக்கில்ல, இதுல இன்னொருவர் வேறையா, ஒழுங்கா சாமர்த்தியமா வாழ துப்பில்ல, இங்க வந்து உட்காந்துகிட்டு வெட்டிசோறு சாப்பிடுறியானு கேவலமாக பேச மயில் சாப்பிடாமல் அறைக்கு சென்று அழுகிறார்.
பின் சரவணனுக்கு அழுதபடி மெசேஜ் அனுப்புகிறார்.