மயிலை வீட்டில் பார்த்ததும் வெளியே அனுப்ப சொன்ன செந்தில், ஆனால் மீனா செய்த காரியம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ், குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்.
கதையில் சரவணன் மயில் பற்றிய உண்மையை வீட்டில் கூறியதால் பிரச்சனை வெடிக்க இப்போதும் அது தொடர்ந்து கொண்டே வருகிறது. நேற்றைய எபிசோடில், மயில் அம்மா அவரை வீட்டைவிட்டு வெளியே போ, எங்கேயாவது போ என துரத்திவிட்டார்.

அப்படியே சரவணன் கடைக்கு வந்தவர் அவரிடம் பேச அவரும் என் கண் இருக்காதே எங்கேயாவது போ என்கிறார். வருத்தத்தில் மயில் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுக்க அந்த நேரத்தில் மீனா வந்து காப்பாற்றுகிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், மயிலை காப்பாற்றி மீனா தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார், அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது திடீரென செந்தில் வீட்டிற்கு வர மயிலை பார்த்ததும் செம கோபப்படுகிறார், அவரை முதலில் வெளியே அனுப்பு என மீனாவிடம் கத்துகிறார்.

ஆனால் மீனா அவர் இருக்கும் நிலைமையில் என்னால் வெளியே போக சொல்ல முடியாது என்கிறார். இதனால் செந்தில் மீனாவிடம் கோபப்பட்டு வெளியே சென்றுவிடுகிறார்.