மீனாவிற்கு ஆதரவாக கோமதி செய்த காரியம், பிரச்சனை முடியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரச்சனை, பிரச்சனை என ஒரே பிரச்சனையாகவே சென்று கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
முதலில் மயில் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிய வருவதில் ஆரம்பித்தது, பின் குடும்பமே ஜெயிலுக்கு செல்ல அண்ணன்கள் சாட்சியால் வெளியே வந்தார்கள்.

அடுத்து மயில் அம்மா நகை வைத்து ஒரு பிரச்சனை செய்ய மீனா-ராஜி தலையிட்டதால் மயில் உண்மை சொல்ல அங்கேயே ஒரு பிரச்சனை முடிந்தது.
பின் ராஜி மற்றும் கோமதி அவர்களின் அம்மா வீட்டிற்கு சென்ற சம்பவம் நடந்தது. அந்த சந்தோஷம் நீடிப்பதற்குள் ராஜி-கதிர் திருமணம் எப்படி நடந்தது என்ற விஷயம் வெளியாக இப்போது அதைவைத்து பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

எபிசோட்
இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ராஜி-கதிரின் அழகான காதல் காட்சிகள் இடம்பெறுகிறது.

அவர்களின் கியூட்டான காட்சிகளுக்கு பிறகு பாண்டியன் வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது.
அதாவது வீட்டிற்கு வந்த செந்திலிடம் மீனாவிற்காக கோமதி பேசுகிறார். நீ அவளிடம் சண்டை போடாதே பேசாமல் இருக்காதே, நான் தான் மீனாவிடம் யாரிடமும் கூற கூடாது என சத்தியம் வாங்கினேன் என்றார்.

நீ பேசாமல் இருப்பது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் என கூறுகிறார். கோமதி பேசியதை கேட்டு தனது வீட்டிற்கு வந்த செந்தில் மீனாவிடம் பேசுகிறார்.