உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By Yathrika Mar 04, 2026 06:22 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியலின் நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த முத்துவேல் தனது அம்மா வீட்டில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு கோபமடைந்தார்.

தனது தம்பி சக்திவேலை, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அம்மாவை வீட்டைவிட்டு அனுப்பியது தவறு என திட்டிவிட்டு கோமதி வீட்டின் முன் நின்று தனது அம்மாவை அழைக்கிறார்.

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

வெளியே வந்த காந்திமதி தனது மகன் முத்துவிடம் நடந்த விஷயம் பற்றி கூறிவிட்டு நான் இனி இருக்கும் காலம் வரை எனது மகளுடன் இருக்கிறேன் என கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுகிறார். 

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

மயில் மருத்துவமனையில் இருந்து நேராக தனது வீட்டிற்கு சென்று அம்மாவிடம் இந்த விஷயம் குறித்து கூறுகிறார். அவர் மனதிற்குள் சந்தோஷப்பட்டாலும் பாண்டியன் குடும்பத்தை இதைவைத்து ஒரு வழி செய்கிறேன் என கோபமாக கூற பின் மீனா கொஞ்சம் அமையாக இருக்க கூறுகிறார்.

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

எபிசோட்

இன்றைய எபிசோடில், மீனா-செந்தில் இருவரும் கொஞ்சம் ரொமான்டிக்காக பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மீனாவிற்கு ஒரு போன் கால் வருகிறது, ஷியாமளா என்ற நம்பரில் இருந்து போன் வர மீனா செந்திலிடம் இருந்து தப்பிக்கிறார்.

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

உண்மையில் அந்த காலில் வந்தது மயில், அவர் மீனாவிடம் சரவணனிடம் இந்த விஷயத்தை கூற வேண்டும், அவரை கோவிலுக்கு வரச்சொல்ல முடியுமா என்கிறார். மீனாவும் இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்ற எண்ணத்தில் சரவணனை வர சொல்ல அவரும் செந்தில் பிரச்சனையா என கேட்க மீனா ஆமாம் என்கிறார்.

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

கோலிலில் சரவணன் நின்றுகொண்டிருக்க அங்கு மயில் அவரை காண்கிறார். நான் தான் உங்களிடம் பேச வேண்டும் என மீனாவிடம் கூறி உங்களை வரச்சொன்னேன் என்கிறார். உடனே சரவணன் மீனாவை உங்களது கூட்டணியில் சேர்த்துவிட்டீர்களா என்ன பொய் சொல்லி சேர்த்தீர்கள் என கோபப்படுகிறார்.

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

மயில் பின் சரவணனிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூற அவர் சுத்தமாக ஏற்க மறுக்கிறார். உன் முகமே பிடிக்காமல் தள்ளி இருக்கிறேன் பிறகு எப்படி என் குழந்தை என்கிறாய், இது யாருடைய குழந்தை.

உன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial March 4 Episode Storyline

மயில் பார்த்த கோபத்தில் சரவணன் மீனாவிடம் வந்து சண்டை போடுவாரா, அல்லது பாண்டியன் மற்றும் குடும்பத்திடம் இதனை கூறுவாரா, இல்லையென்றால் செந்திலிடம் மீனா செய்த விஷயத்தை கூறுவாரா என தெரியவில்லை..

ஆக மொத்தம் மயில் கூறிய விஷயத்தால் மீனா சிக்கலில் சிக்க இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US