மயில் எடுத்த முடிவு, இப்போது பாண்டியன் குடும்பத்தில் வெடிக்கப்போகும் பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோரஸ் 2
பாண்டியன் ஸ்டோரஸ் 2
விஜய் டிவியில் குடும்பங்களை ஒன்றாக அமர்ந்து பார்க்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
பாண்டியன் கோமதி எப்போது பேசிக்கொள்வார்கள் தெரியவில்லை, மீனா கொடுத்த ஐடியாவை இன்னும் பாலோ செய்கிறார் கோமதி. கதிர்-ராஜி திருமணம் செய்துகொண்டு இப்போது காதலித்து வருகிறார்கள்.

மயில் சரவணன் கர்ப்பத்தை பற்றி தவறாக கூறியதால் இனி அவரின் தயவு வேண்டாம் நானே என் குழந்தையை பார்த்துக்கொள்வேன் என தைரியமாக முடிவு எடுத்துவிட்டார். இதுநாள் வரை சரவணன்-மயில் விவாகரத்து பிரச்சனை தான் பெரியதாக சென்றுகொண்டிருந்தது. அடுத்த வாரம் கதை மாறும் என தெரிகிறது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மயில் அம்மா வழக்கம் போல் மீண்டும் திட்டிக்கொண்டே இருக்கிறார். மயில், சரவணனை இன்னொரு பெண்ணுடன் பார்த்த சோகத்தில் அவர் வீட்டிற்கு வந்து அழுதுகொண்டிருக்கிறார்.
அதைக்கண்டு மயில் அம்மா மேலும் கஷ்டத்தை கொடுக்கும் அளவிற்கு பேசுகிறார்.

இங்கு பாண்டியன் வீட்டில் கோமதி ஆடைகளை துவைத்த போடாமல் வைத்திருப்பதால் பாண்டியனே அதை துவைத்து கடைக்கு செல்கிறார், அந்த காட்சிகள் ஒளிபரப்பானது.
கடைசியாக செந்தில் தனது மாமனார் சொன்னதை நன்றாக தலையில் ஏற்றிக்கொண்டார் என தெரிகிறது. அதாவது லட்சம் வாங்க முன்வந்துவிட்டார், இன்றைய எபிசோடில் அதற்கான காட்சிகள் வருகிறது.

இதனை பார்க்கும் போது கண்டிப்பாக செந்தில் சிக்கும் காட்சிகள் அடுத்து வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri