பாண்டியன் கேட்டபடி பணத்தை திருப்பி கொடுத்த மகன், யாரு பாருங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 படப்பிடிப்பு தள போட்டோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ராஜி-கதிர் திருமணத்தை செய்து வைத்த கோமதியை மன்னிக்கவே மாட்டேன் என கோபமாகவே உள்ளார் பாண்டியன்.
கோமதியும் எவ்வளவோ கெஞ்சியும் அவர் மன்னிப்பதாக தெரியவில்லை, இதனால் அவரும் இனி உங்களிடம் நான் வந்து கெஞ்ச மாட்டேன் என இருக்கிறார். கடந்த சில எபிசோடுகளுக்கு முன் காந்திமதி ஒன்று நினைத்து பிளான் போட இப்போது வேறொரு பிரச்சனையாக மாறிவிட்டது.

பாண்டியன் இனி கோமதி சமைத்ததை சாப்பிட மாட்டேன் என முடிவு எடுத்துவிட்டார். அதோடு கோமதி காணவில்லை என்றதும் ஓவராக பேசிய கதிர்-செந்திலிடம் தான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை இருவரும் திருப்பி தர வேண்டும் என கண்டிஷன் போடுகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட நேரம் போய் இப்போது பாண்டியன் வெளியில் இருந்து வாங்கிவந்து அரசி மற்றும் சரவணனுக்கு கொடுத்துவிட்டு சாப்பிடுகிறார்.
பின் கோமதி டீம் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். அடுத்த செந்தில் எப்படி பணம் திருப்பி தருவது என சோகத்தில் அமர்ந்துகொண்டிருக்கிறார், அப்போது மீனா வந்து சில விஷயங்கள் கூறுகிறார், இருவரும் பணம் பற்றி பேசிக்கொள்கிறார்கள்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 படப்பிடிப்பு தள போட்டோ வெளியாகியுள்ளது. அதில், பாண்டியனிடம் செந்தில் ரூ. 10 லட்சத்தை திருப்பி தருவது போல் புகைப்படம் அமைந்துள்ளது.
இதோ பாருங்க,