பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஷாலினி, ஆகாஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ விவரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் மிக முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. மக்களின் மனம் கவர்ந்த இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, ஆகாஷ், ஷாலினி, சரண்யா, ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

தற்போதைய கதைகளம்படி, முத்துவேலின் புற்றுநோய் குறித்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியவந்து பெரிய பூகம்பமே வெடித்தது. இது ஒரு பக்கம் இருக்க, செந்தில் மற்றும் மீனா இருவரும் குவார்டஸில் (quarters) இருந்து நம்முடைய வீட்டிற்கு மீண்டும் வர சொல்லிவிட்டார் பாண்டியன். இது மீனாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும், செந்திலுக்கு இதில் உடன்பாடு இல்லை.
ராஜி - கதிர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரின் மனதையும் கவர்ந்த ஜோடிகளில் ஒன்று ராஜி - கதிர். இந்த கதாபாத்திரங்களில் நடிகை ஷாலினி மற்றும் நடிகர் ஆகாஷ் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க இவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராஜியாக நடிக்கும் நடிகை ஷாலினி ஒரு நாளைக்கு ரூ. 5,000 சம்பளம் வாங்கி வருகிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஆகாஷ் ஒரு நாளைக்கு ரூ. 7,000 சம்பளம் வாங்கி வருகிறாராம்.