அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் எந்த நேர மாற்றமும் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கடந்த 2018ம் ஆண்டு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடி முடிவுக்கும் வந்தது.

ஆனால் அதே வேகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் 2ம் பாகம் தொடங்கப்பட்டது. சில பழைய நடிகர்களும், நிறைய புது நடிகர்களும் இடம்பெற ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் இப்போது பரபரப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக கோமதி-பாண்டியன் சண்டை தான் பெரியதாக சென்றுகொண்டிருக்கிறது.
குமரன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் குமரன்.

இப்போது வெப் தொடர்கள், படங்கள் என பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் குமரன் பேசும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் எனக்கு மீண்டும் சினிமா கதவுகளை திறக்கச் செய்தது.
எஸ்.ஜே.சூர்யா நடித்த வதந்தி வெப் சீரிஸில் நடித்தது எனது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. ஹீரோவாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கினேன், பல்வேறு வகை கதைகளில் நடித்து பார்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

ஒரு படம் வெற்றி என்றால் அதே மாதிரியான கதைகளை தேர்வு செய்யாமல் பல்வேறு கதைகளில் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன். ஒரே மாதிரியான கேரக்டரில் சின்ன விரும்பவில்லை, நெகட்டீவ் கதாபாத்திரம் கிடைத்தாலும் அதையும் முயற்சி செய்யத் தயார் என கூறியுள்ளார்.