அரசியலில் அது மட்டும் போதாது, பணமும் தேவைப்படுகிறது.. பார்த்திபன் ஆவேசம்!
பார்த்திபன்
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இப்போது ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.
சின்ன சின்ன வேடத்தில் நடித்து அசத்தியவர் புதிய பாதை படத்தை இயக்கியும், நடித்தும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.
பின் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கியவர் நீ வருவாய் என, அழகி, அம்புலி என பல வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார். இப்போது படங்கள் இயக்குவது, படங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.
அது மட்டும் போதாது
இந்நிலையில், பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் கிடையாது. இங்கு போட்டி பயங்கரமாக இருந்தால்தான் வெற்றி நியாயமானதாக இருக்கும் என்பது என் கருத்து.
கரூரில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல் இனி எங்கும் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.