பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்.. முன்னாள் ஊழியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

By Dhiviyarajan Dec 06, 2022 05:30 PM GMT
Report

நடிகை பார்வதி நாயரின் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற ஊழியர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகை வீட்டில் களவு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்வதி நாயர் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி விலை உயர்ந்த பொருட்கள், கை கடிகாரம் மற்றும் லேப்டாப் போன்ற பொருட்கள் காணாமல் போனதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கு எனது வீட்டில் வேலை செய்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் தான் கரணம் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவிட்டு விசாரணை நடத்தினர். அப்போது தன் மீது தவறான பொய் புகார் அளிக்கிறார் என்று பார்வதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார் சுபாஷ்.

பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்.. முன்னாள் ஊழியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு | Parvati Nair Threatened By Her Staff

மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சமீபத்தில் மீண்டும் பார்வதி நாயர் காவல் ஆணையரிடம் சுபாஷ் சந்திர போஸ் மீது மீணடும் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில் தனது பிரைவேட் புகைப்படத்தை வைத்து மிரட்டுவதாகவும், செல் போனில் கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்தியதற்கும், கொலை மிரட்டல் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதற்கும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ


  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US