ரங்கன் வாத்தியாரையும் விட்டு வைக்கலையாப்பா.. சர்ச்சைக்கு பசுபதி அதிகாரப்பூர்ப அறிவிப்பு
பசுபதி இன்று தன் பெயரில் போலிக்கணக்கு சமூக வலைத்தளத்தில் உலா வருவதை அறிந்து ஒரு அறிக்கை விட்டுள்ளார் அதோடு சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கும், ஆதரவிற்கும் நன்றி சொல்லியும் பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார், இதோ..
வணக்கம்,
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி..செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.
ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல.
( நான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லாததால் இந்த செய்தியெய் PRO ஜான்சன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். )
நன்றி,
அன்புடன்,
பசுபதி
கடந்த சில நாட்களாக பசுபதி பெயரில் பல போலிக்கணக்குகள் சமூக வலைத்தளத்தில் உலா வர, அதற்கு பசுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.