பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
பெத்தி
உப்பெண்ணா திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கண்டவர் இயக்குநர் புச்சிபாபு. இவர் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக வெளிவந்துள்ளது பெத்தி. இப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண் நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து சிவராஜ் குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.
வசூல்
இதுவரை 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பெத்தி திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 290 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்து சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu