அத்து மீறிய நடிகர் கைது! தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம்! போலீஸ் சன்மானம்!
நாடு முழுக்க தற்போது பரபரப்பு சூழ்ந்துள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான சம்பவங்களை நடைபெற்று வருகின்றன.
அதிலும் வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. பலரும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றன.
அண்மையில் குடியரசு தின விழா சமயத்தின் போது பஞ்சாப் நடிகர் தீப் சித்து தன் ஆதரவாளர்களுடன் அழைத்து பேரணியில் கலந்து கொண்ட தோடு தடுப்புகளை மீறி செங்கோட்டை வரை சென்று அங்கு சீக்கிய மத கொடியை ஏற்றியதாதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
அனுமதி இல்லாத இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடித்து அரசு ஊழியரை தாக்கியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் தலைமறைவானார். தீப் சித்துவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை அறிவித்தது.
இந்நிலையில் போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல் News Lankasri