பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படங்கள்.. வெளியிட்டது யார் தெரியுமா
தமிழ் திரையுலகின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இதனை தற்போது இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்.
இப்படத்தில், விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என திரையுலக பட்டாளமே நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், பிரமாண்ட போஸ்டருடன் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்தார்கள்.
மேலும் சில நாட்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்து, சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், அதே போல் தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், இதனை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் மணி ரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு..