விஜய் படத்தில் ஒப்பந்தத்தை மீறிய நடிகை பூஜா ஹெக்டே.. கிளம்பிய சர்ச்சை
சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே
இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்து வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் தோல்வியை அடைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டேவின் மீது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. ஆம், இப்படத்தில் நடிக்க வந்த பூஜா ஹெக்டே, தன்னுடைய உதவியாளர்கள் என்று 10 முதல் 12 நபர்களை அழைத்து வந்துள்ளாராம்.

படப்பிடிப்பின் போது, உதவியாளர்களுக்கு அநாவசியமாக செலவு செய்யக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து பூஜா ஹெக்டேவிட்டும் கூறப்பட்டதாம். ஆனால், அதையும் மீறி தன்னுடைய உதவியாளர்களுக்கு பூஜா, அநாவசியமாக செலவு செய்துள்ளதாக, சமீபத்தில் கண்ணக்கு ஆய்வில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டபோது தெரியவந்துள்ளது.
இதனால் அந்த பணத்தை திரும்ப தரவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் பூஜா ஹெக்டேவிடம் அறிவுறுத்தி இருப்பதால், பணத்தை திருப்பி கொடுக்க பூஜா ஹெக்டே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu