இரண்டாவது முறையாக ரஜினிகாந்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்.. தோல்வியில் முடிந்து முதல் கூட்டணி
ரஜினிகாந்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா ராய், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினியுடன் இரண்டாவது முறையாக கைகோர்க்கவுள்ளார் யோகி பாபு என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய மூன்று படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகி பாபு, ரஜினியின் ஜெயிலர் படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்திற்கு முன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படத்தில் ரஜினியுடன் இணைந்து யோகி பேபி நடித்திருந்தார் என்பதும், அப்படம் தோல்வியை தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.