பாட்ஷா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருத்தது இவர் தானாம்.. யாருனு தெரியுமா
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா.
இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கம் திருவிழா போல் அதிர்ந்தது. மேலும் பாட்ஷா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
இப்படத்தில் ரஜினி மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு பாட்ஷா என்று பேர் வர காரணமே, அவரது நம்பர் அன்வர்.
படத்தின் முக்கியமான அன்வர் பாட்ஷா கதாபாத்திரத்தில் நடிகர் சரண் ராஜ் நடித்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, மலையாள நடிகர் மம்மூட்டி தானாம்.
ஆனால், ஏற்கனவே மம்முட்டி ரஜினிகாந்திற்கு நண்பனாக தளபதி படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாம் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அதன்பின் தான், இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சரண் ராஜ் கமிட்டாகி நடித்துள்ளார்.