பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. கார்த்தி கிடையாதாம்..
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும், இப்படத்தின் ஓடிடி ரைட்ஸ் மட்டுமே ரூ. 125 கோடி வரை விற்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். சமீபத்தில் கூட அவருடைய லுக் போஸ்டர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
கார்த்திக்கு முன்பு இவர் தான்..
இந்நிலையில், இந்த வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது கார்த்தி கிடையாதாம். விஜய் சேதுபதி தான், முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தாராம். ஆனால், அப்போது சில காரணங்களால் இப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் தெரிவிக்கின்றன.
