மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை விசித்ரா... என்ன ஆனது?
நடிகை விசித்ரா
தென்னிந்திய சினிமாவில் நடன கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி பின் நாயகி, குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தான் விசித்ரா.
தொடர்ந்து நடித்துக்கொண்டு வந்தவர் திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
அதன்பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7வது சீசன் பங்குபெற்று விளையாடி இருந்தார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை, ஆனால் நிகழ்ச்சியில் அவர் சொன்ன விஷயம் மட்டும் வைரலாக பேசப்பட்டது.
இன்ஸ்டா பதிவு
எப்போதும் அழகான புகைப்படங்கள் வெளியிடும் நடிகை விசித்ரா தனது இன்ஸ்டாவில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், வலி நம் வாழ்வைச் சற்றே நிறுத்தி வைக்கலாம், ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது.
ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறது எனத் தனது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.