ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் சென்சேஷன் இயக்குனர்.. அட, இவரா
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி.
மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.
கோமாளி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் சென்சேஷன் ஹிட்டானது.
இந்நிலையில், அவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
After listening to a lot of scripts locked our next projectSuper happy to introduce @pradeeponelife as hero under our banner @Ags_production for a kickass script written and directed by him 😊 #Ags22 #KalpathiAghoram #KalpathiGanesh #KalpathiSuresh @aishkalpathi @venkatmanickam5 pic.twitter.com/H0EYrSxWY1
— Archana Kalpathi (@archanakalpathi) October 4, 2021