சங்கர் படத்தில் கதாநாயகியாக இளம் சென்சேஷன் நடிகை - அட, இவரா
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம்சரணுக்கு இரட்டை வேடமாம். அதனால் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்நிலையில், இளம் சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.