மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம்.. யாருனு நீங்களே பாருங்க
சூப்பர் சிங்கர் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார்.
அவ்வப்போது வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களில் நடித்தும் வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு' தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் சவுந்தர்யா.
அந்த சீரியல் முடிந்த பின் வேறு சீரியலில் கமிட்டாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.
இந்நிலையில் ஜீ தமிழில் நேற்று, ஞாயிறு அன்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் மணமகளாக நடித்து மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுமா அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்ற சிறு ரோலாக போய்விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.