பாகுபலி 3யா..? நடிகர் பிரபாஸ் கொடுத்த மாபெரும் சர்ப்ரைஸ்
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் பாகுபலி.
இரண்டு பாகங்களாக வெளிவந்த இப்படம், பல நூறு கோடிகளை வசூல் செய்து இந்தியளவில் மாபெரும் சாதனை படைத்தது.
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ராதேஷ்யாம். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் தற்போது ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரபாஸிடம், பாகுபலி 3 வருமா என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரபாஸ் " நானும் ராஜமவுலியும் எங்களது படங்களை பற்றி அடிக்கடி விவாதிப்போம். நிச்சயம் ஏதாவது ஒன்று நடக்கும். நானும் ராஜமவுலியும் பாகுபலியை விட்டு விலகவில்லை. யாருக்கு தெரியும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் " என்று கூறியுள்ளார்.
இதன்முலம் விரைவில் பாகுபலி 3 வருவதற்கு பெரிதும் வாய்ப்புகள் உண்டு என தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..