ஹீரோவாக முதல் படம் ப்ளாக் பஸ்டர்.. இரு சென்சேஷன் நடிகைகளுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்
கடந்த ஆண்டு லவ் டுடே படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க போகிறார், அதிதி ஷங்கருக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளார் என தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது.
அடுத்த படம்
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மிதுன் எனும் அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மிதுன் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர் ஆவர்.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் சென்சேஷன் கதாநாயகிகளாக இருக்கும் ராஷ்மிகா மற்றும் பிரியங்கா மோகன் இருவருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என தெரிவிக்கின்றனர். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல்