அஜித் சொன்ன விஷயம் கேட்டு கடும் வருத்தத்தில் நடிகர் பிரசன்னா- நடந்தது இதுதானாம்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். இவரை வைத்து படம் இயக்கினால் வெற்றி தான், லாபம் வந்துவிடும் என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களிடம் உள்ளது.
அஜித் நடிப்பில் இப்போது வலிமை திரைப்படம் தயாராகியுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படத்தின் சில வீடியோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.
ரசிகர்களும் செம டிரண்ட் செய்து கொண்டாடிவிட்டனர். தற்போது நடிகர் பிரசன்னா, அஜித் மற்றும் வலிமை படம் குறித்து ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதில், அஜித் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை கேட்டு சந்தோஷம் அடைந்தேன். ஆனாலும் வலிமை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது.
வரும் காலத்தில் நல்ல விஷயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டுவிட் செய்துள்ளார்.
Extremely delighted to know that my dear #Thala trusted in me. Though it was disappointing when #Valimai opportunity slipped away, I am confident great things are yet to come. 🤩🤩🙏🙏
— Prasanna (@Prasanna_actor) October 15, 2021