வெளியேறும் முன் பிரவீன் காந்தி செய்த காரியம்.. விஜய் சேதுபதியே கடும் ஷாக்
பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி ஒருவாரம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த ஷோவில் இருந்து நந்தினி திடீரென வெளியேறிவிட்ட நிலையில் முதல் வார இறுதியில் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என கேள்வி எழுந்தது.
ஆனால் நிச்சயம் எலிமினேஷன் இருக்கும் என அறிவித்து பிரவீன் காந்தியை வெளியேற்றினார் விஜய் சேதுபதி.
யாரும் வராதீங்க
வழக்கமாக ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆனால் அவர் வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களள் இறுதிவரை உடன் வந்து வழியனுப்புவார்கள். ஆனால் பிரவீன் காந்தி அப்படி யாரும் எனக்கு வரவேண்டாம், உள்ளே போங்க என சொல்லி எல்லோரையும் உள்ளே அனுப்பினார்.
மேலும் விஜய் சேதுபதி உடன் பேசும்போது 'நான் எலிமினேட் ஆகவில்லை. நான் எங்கும் இருப்பேன். இங்கே மேடையிலும் இருப்பேன், உள்ளே வீட்டிலும் இருப்பேன்' என கூறினார். அவர் வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு bye என்று கூட சொல்லாமல் வெளியில் வந்தது பற்றி விஜய் சேதுபதியும் அதிர்ச்சியாகப்பேசினார்.
பிரவீன் காந்தி பேசிவிட்டு கிளம்பி சென்றபிறகு விஜய் சேதுபதி அதை சொல்லி எல்லோரிடமும் கலாய்த்தார்.