சென்சேஷனல் இளம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. சசி குமார் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த அயோத்தி படத்தில் கதையின் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் தற்போது கவினுடன் இணைந்து கிஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யா இயக்க நடிக்கும் கில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் ப்ரீத்தி அஸ்ரானி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில், சேலையில் தான் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை ப்ரீத்தி அஸ்ரானி இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..






