இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?- முதன்முறையாக நடிகை பிரியா பவானி ஷங்கர் சொன்ன விஷயம்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அவர்களின் லிஸ்டில் தமிழ் சினிமாவில் இப்போது கலக்கி வரும் நாயகி தான் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
செய்தி தொலைக்காட்சியில் வாசிப்பாளராக இருந்த அவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்தார். அந்த சீரியல் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.
மேயாத மான் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் செம ஹிட் தான்.
காதலர், திருமணம்
பிரியா பவானி ஷங்கருக்கு ராஜவேல் என்ற காதலர் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இப்போது தான் வெளியாகி வருகிறது.
10 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு நடிகை பிரியா, படித்து முடித்துவிட்டு திருமணம் என இருந்தேன், பின் வேலைகள் கிடைத்தது. சீரியலுக்கு பிறகு திருமணம் என நினைத்தால் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது.
எனவே தான் எனது திருமணம் தள்ளிக்கொண்டே செல்கிறது என கூறியுள்ளார்.
50 நாளில் யஷ் நடித்த KGF 2 பட உலகம் முழுவதும் செய்த வசூல்- முழு விவரம்

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
